இறைவன் யாரை நேசிக்கிறான்
* உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை வழங்கி இருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக!* நாம் இவர்களில் சிலருக்கு வேறுசிலரைவிட உயர் பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக.* இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள், (இதன் மூலமே) நீங்கள் வெற்றியடையக் கூடும்.* திண்ணமாக, இறைவன் தீமைகளிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கிறான்.* எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவரே இறைவனின் நேசத்திற்குரியவராவார்.* திண்ணமாக தன்னை முழுமையாக சார்ந்திருந்து செயல்படுவோரை இறைவன் நேசிக்கின்றான்.* வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து