மகிழ்ச்சியுடன் இருங்க
UPDATED : ஜூலை 10, 2014 | ADDED : ஜூலை 10, 2014
* கடவுள் எப்போதும் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருங்கள்.* புண்ணியம் செய்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மனிதப்பிறவியால் தெய்வநிலையை அடையுங்கள்.* எந்த இடத்தில் இருந்தாலும் மன மகிழ்ச்சியுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.* எப்போதும் சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.* உண்மையான துறவு எண்ணம் இருந்தால் தான் பணத்தின் மீதான மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும்.* கடவுள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய்.- சாரதாதேவியார்