உள்ளூர் செய்திகள்

கடவுள் மட்டுமே உண்மை

* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.* கடவுள் எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.* பக்தியில் ஆழ்ந்து கடவுளின் திருவடிகளை அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள்.* இந்த மனிதப்பிறவியைப் பெற நாம் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்திருக்கிறோம்.* சாதாரண மனிதன் இந்த உடலை விட்டுச் செல்லும்போது அழுகிறான். மகானோ சிரிக்கிறான்.* கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் விதியின் கட்டளைகள் கூட நீக்கப்பட்டு விடுகின்றன.* இந்த உலகில் கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய். * கல்வியின் பயனாக நாம் மேன்மை அடைவதோடு, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும்.* முயற்சியே இல்லாமல் உலகில் எதையும் பெற முடியாது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.- சாரதாதேவியார்