உள்ளூர் செய்திகள்

சாதிக்க என்ன வழி

* பக்தி அவரவர் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. அன்புள்ள ஒருவனின் மனதில் பக்தி தானாக கிளர்ந்தெழும்.* கடவுளின் அருள் நாம் எதிர்பார்க்காத நேரத்திலேயே கிடைக்கும் என்பதால், அவரது அருளைப் பெற பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.* கடவுள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். அவரிடம் ஒருவன் கொள்ளும் தீவிரமான பக்தி நிலைக்கு ஏற்பவே, அவரை உணர முடியும்.* ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனைத் தருவதால் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். பிறரிடம் கடுமையாகப் பேசுவது, பிறருடைய துன்பத்திற்கு காரணமாவது நல்லதல்ல.* தன்னை நம்பியிருப்பவரை அனைத்து துன்பங்களில் இருந்தும் கடவுள் காப்பாற்றுகிறார்.* பக்தி, அன்பு மூலமாக வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம்.* பகவானின் திருநாமத்தை ஜபிப்பதால் மட்டுமே மனிதனின் உடலும் மனமும் தூய்மையை அடையும்.-சாரதாதேவியார்