உள்ளூர் செய்திகள்

மனதில் உறுதி கொள்

* மன உறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காக்கும்.* பிறர் உங்களை துன்புறுத்தினால் கூட பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்.* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி.* பேச்சு, செயலில் துாய்மையைக் கடைபிடி. உன் மனம் பரிசுத்தமாக இருக்கட்டும்.* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும். - சிவானந்தர்