உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்: ஆண்டுதோறும், கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு, 177 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும். நடப்பாண்டில் இதுவரை, 149 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எங்கள் கணிப்பின்படி, காவிரியில் தமிழகம் வழியாக நடப்பாண்டு, 71 டி.எம்.சி., தண்ணீர் வீணாககடலில் கலந்து உள்ளது. டவுட் தனபாலு: என்னமோ, தாராள பிரபுவா தண்ணீர் திறந்து விட்ட மாதிரி பேசுறீங்களே... உங்க மாநில அணைகள் எல்லாம் நிரம்பி வழிஞ்சு, உபரி நீரை திறந்து விட்டுட்டு, அது கடலுக்கு போயிடுச்சு, கால்வாய்க்கு போயிடுச்சுன்னு கதை கட்டுறது நியாயமா என்ற, 'டவுட்' எழுதே!பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: தமிழகத்தை ஆளும், தி.மு.க., ஹிந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சி. ஹிந்து கோவில்களை மட்டும், மத நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து நிர்வகிக்கப்படுவதை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். ஆனால், பார்லிமென்டில், 'முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம்...' என, கேட்கின்றனர்.டவுட் தனபாலு: மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்றவங்க, ஹிந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லையே... 'எங்களுக்கு வாழ்த்து சொல்லாதவங்களுக்கு ஓட்டு அளிக்க மாட்டோம்' என, ஹிந்துக்கள் என்றைக்கு முடிவு எடுக்குறாங்களோ, அன்று தான் அவங்க திருந்துவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக, பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன்: தி.மு.க.,வை சேர்ந்த, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, 'மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதி போட்டியில் பங்கேற்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடி தான் காரணம்' என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். நீண்ட வற்புறுத்தலுக்கு பின், புகாரை பெற்று ஒப்பம் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோர்ட்டுக்கு செல்வேன்.டவுட் தனபாலு: இதே, உங்க கட்சிக்காரர் யாராவது, தி.மு.க., அரசை விமர்சனம் பண்ணி பதிவு போட்டுட்டா, பயங்கரவாதிகளை சுத்தி வளைக்கிற மாதிரி கைது பண்ணுவாங்க... அதே போலீசார், ஆளுங்கட்சியினர் இருக்கிற திசை பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 12, 2024 16:54

இப்படி தண்ணீர் சண்டை போடுவதைத் தவிர எந்த திராவிடக் கட்சி ஆண்டாலும் ஒரு தடுப்பணையையோ, ட்ரெக்கிங் வைத்து ஏரி குளங்களுக்கு சேர்க்கவோ எந்த ஏற்பாடும் செய்ய மாட்டார்கள் மழைநீர் அறுவடை என்று ஜெயலலிதா ஆரம்பித்த திட்டம் இயற்கை முடிவை அசைந்ததும் ஆறு குளங்களை மணல், சவுடு அள்ளி மலடாக்கிவிட்டு இல்லைப் பாட்டுப்பாடத்தான் தெரியும்


N DHANDAPANI
ஆக 12, 2024 15:34

துணை முதல்வர் சிவக்குமார் அவர்களுக்கு வணக்கம் ஏற்கனவே தினமலர் கேட்டிருக்கும் கேள்வியோடு இன்னொன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் .....................நீங்கள் உங்கள் துங்கபத்திரா அணையில் தனியாக சேர்த்துசேர்த்து வைத்திருந்து யாருக்கும் பாசனத்துக்கு நீர் தராமல் இப்பொழுது மதகு எண் 19 உடைந்து விட்டதாமே? எப்படி சரி செய்ய போகிறீர்கள் ? 35 டிஎம்சி தண்ணீர் ஏற்கனவே வீணாகப் போய்விட்டது............. தமிழ்நாட்டு தண்ணீர் நிர்வாகத்தை பற்றி நீங்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் காங்கிரஸ்காரருக்கு இவ்வளவு தரிசனம் தண்ணீரை சேர்த்து வைப்பதில் ஒருவேளை தேசிய அளவில் ஆட்சிக்கு வர முடியாமல் உள்ள உங்கள் கண்ணீருக்கு பதில் தண்ணீரை வைக்கிறீர்களோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை