உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  மத்தியிலும் பங்கு கேட்கிறாரோ?

 மத்தியிலும் பங்கு கேட்கிறாரோ?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சமீபத்தில் திருநெல்வேலி வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'தமிழகத்தை தாண்டி, விஜயின் அரசியல் தாக்கம் அதிகரித்துள்ளது. இது, 2029 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். 'இண்டியா' கூட்டணி, 2029ல் ஆட்சி அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதில், த.வெ.க.,வும் இணைந்து பயணிக்கும். 2029ல் பிரதமர் யார் என்பதை, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வர். 'அரசியலமைப்பு சட்டம், நல்லிணக்கம், சமூக நீதியை காக்கும் நல்லாட்சி, 2029ல் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஆட்சியில் முஸ்லிம் லீக், த.வெ.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்படும்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'மாநிலம் மாதிரியே, மத்திய ஆட்சியிலும் பங்கு பெறணும்னு நினைக்கிறாரோ?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
ஆக 30, 2026 20:23

என்ன பேராசைடா இந்த ஆளுக்கு எடுத்த எடுப்பிலே மத்தியில் ஆட்சி வேண்டுமாம் அதிலே இவர்களுக்கும் பங்கு வேண்டுமாம் இது என்ன பாகிஸ்தானா இப்படி பேச இவருக்கு


D.Ambujavalli
ஆக 30, 2026 17:31

முதலில், தேர்தலுக்காக. அளித்த. வாக்குறுதிகளை, terms And . Condition. ஒவ்வொன்றாக போட்டு. தப்பிக்கப்பார்த்து. மக்களின். அதிருப்தியை. சம்பாதிப்பதிலிருந்து. மீள்வாரா. என்பதை. பார்க்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை