உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலைகளில் திரியும் மாடுகள் திருப்போரூர் பகுதியில் தொல்லை

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலைகளில் திரியும் மாடுகள் திருப்போரூர் பகுதியில் தொல்லை

சாலைகளில் திரியும் மாடுகள் திருப்போரூர் பகுதியில் தொல்லை

திருப்போரூர் ஒன்றியத்தில், பேரூராட்சியில் அடங்கிய பகுதிகள், ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய வீட்டுமனை பிரிவுகளால் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு வசிக்கும் ஏராளமானோர் மாடுகளை வளர்த்து வருகின்றனர்.இவர்கள், தங்களின் மாடுகளை சாலைகளில் திரியும்படி விட்டு விடுகின்றனர். இதனால் அம்மாடுகள், ஓ.எம்.ஆர்., சாலை உட்பட பல்வேறு பகுதி சாலைகளில், வாகனங்களுக்கு இடையூறாக கடந்து செல்கின்றன. ஒரு சில மாடுகள் சாலையில் நின்றபடியும், படுத்தும் ஓய்வெடுப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்துக்களும் ஏற்படுகின்றன.எனவே, ஓ.எம்.ஆர்., உட்பட பல்வேறு சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை