திருவள்ளூர்: புகார் பெட்டி; சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு
சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு
பொ ன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் கருமாரியம்மன் கோவில் தெருவில், சிறு மழை பெய்தாலும் மழைநீர் குட்டையாக தேங்கி விடுகிறது. அவற்றில் கழிவுகள் சேர்ந்து, சகதியாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. தெருவில் குடியிருப்போரும், பள்ளி மாணவர்களும் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. தெருவில் மழைநீர் தேங்குவதை தடுக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - - ரா.கிருஷ்ணா, பொன்னேரி.