உள்ளூர் செய்திகள்

நன்னாரி!

தெற்காசிய நாடுகளில் வளரும், கொடி வகை தாவரம் நன்னாரி. அங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள மூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி என்ற பெயர்களும் உண்டு. இதில் பால் வடியும் என்பதால், பாற்கொடி எனப்படுகிறது. வாசனை கொடுப்பதால், சுகந்தி என்ற பெயர் பெற்றுள்ளது. பூமிக்குள் வளரும் வேர்த்தொகுப்பு உடையதால், பாதாள மூலி என அழைக்கப்படுகிறது. நன்னாரியின் கெட்டியான வேர், நறுமணம் நிறைந்தது. இலைகள், நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். வேரில் தயாரித்த சாறு, சிறந்த நீர் உணவாக பயன்படுகிறது. அதை, நன்னாரி சர்பத் என்பர்; வெயில் காலத்தில் இதம் ஏற்படுத்தும்; உடல் வியர்வை போக்கை ஒழுங்குபடுத்தும். சிறுநீரை சீர் செய்யும். குருதியைத் துாய்மை ஆக்கும்.வயிற்றில் புண் உண்டாக்கும், 'ெஹலிகோபாக்டர் பைலோரி' என்ற பாக்டீரியாவை அழிக்கும். காயத்தின் மீது தடவ எளிதில் ஆறும். செரிமானப் பிரச்னையை தீர்க்கும். ரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். பித்தக் கோளாறுகளை சரி செய்யும்.- வி.கவுதம சித்தார்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !