ஊற வைத்த பாதாம்!
பாதாம் பருப்பு மிகவும் சுவையானது. இரவு முழுக்க நீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும்.* நீரில் ஊற வைத்த பாதாமில், 'லிபேஸ்' என்ற நொதி வெளிப்படும். இதை உண்டால் எளிதில் செரிக்கும்* கெட்ட கொழுப்பை குறைக்கும் குணம், ஊற வைத்த பாதாமுக்கு உண்டு. இதயத்துக்கு உகந்தது. ரத்தத்தில், 'ஆல்பா டேகோபெரோல்' என்ற பொருள் அதிகரிக்க செய்கிறது. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை அளவும் கட்டுப்படும்* பாதாமில் உள்ள கொழுப்பு எளிதில் வயிற்றை நிரப்பி விடும். இதனால், நொறுக்குத்தீனி தின்பது கட்டுப்படும்; உடல் எடை குறையும்* கர்ப்பிணிகளுக்கு, போலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்க செய்கிறது. இது குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது* ஊற வைத்த பாதாமில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்ட்களால், இளமை தோற்றம் கிடைக்கும். இதிலுள்ள சத்து புற்றுநோய் உருவாவதை எதிர்க்கும் தன்மை உடையது. இது போல் பல நன்மைகளை தரும் பாதாம்.- பொ.பாலாஜி கணேஷ்