உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை

மவுனம் எனும் மந்திர மொழி!எதை தவற விட்டேன்என் இதயம் எம்பி குதிக்கிறதே!பொதும்பலில் புதைந்து கிடந்தஎன் நரம்புகள் வெப்ப கனலில்முறுக்கேறி வேலி தாண்டுகிறதே!விழிகள் விழித்திருந்தும்மனம் விட்டத்தில் முட்டஎட்டிப் பார்க்கிறதே!முல்லைப் பூக்களின் வாசம்முகம் மலர்த்தியும்முட்களின் நட்பைமுன்னிறுத்துகிறேன்!புத்தனின் போதனைகள் கற்ற பின்பும்போதி மரத்தின் கிளைகளைகொத்திப் பார்க்கிறேன்!அமைதி புறாக்கள்அழகாய் அடி பணிந்தும்அஸ்திரங்களால் குறி பார்க்கிறேன்!ஆர்ப்பரிக்கும்ஆழிப் பேரலைகளை விடஅதிவேகமாக அல்லவாமதியிழக்கிறேன்!எப்படி முடிகிறது... சீற்றத்திலேயும்சுமை தூக்கியேசுகம் பெற இந்தபூமிக்கும், சாமிக்கும்!தன் உடமைகளையும், உரிமைகளையும்சூறையாடும் சூத்திரதாரர்களையும் சுகமாக தூக்கி சுமக்கிறதே இந்த பூமி!தன்னை பிரித்தாளும்பினாமிகளையும் பிள்ளைகளாகவேபெருமைப்படுத்திக் கொள்கிறதேஇந்த சாமி!அப்படியானால்பொறுமை எனும்பொக்கிஷத்தை நான்தொலைத்து விட்டேனா இல்லைபோதும் என்று புதைத்து விட்டேனா...அதனால் தான்அவசரமும், ஆத்திரமும் என்அங்கத்தில் அணிவகுத்துஅல்லோலகல்லோலப்படுத்துகிறதா?பொறுமை புதைத்து வைக்கும் பொக்கிஷமல்ல பெருமையுடன் பேணி காக்கும் பிரதான அணிகலன்!அந்த அமைதி அணிகலனைஅணிந்தவன் மட்டுமேஅகிலம் ஆளும்பெருமை பெற்றவனாகிறான்.மவுனம் எனும்அந்த மந்திர மொழிபயிலும் எவரையும்வணங்க காத்திருக்கிறதுஇவ்வையகம்!— க.அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !