அந்துமணி பதில்கள்!
இது தான், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது என்பது... 'கிரிமினல்' ஆதரவுடன் கட்சி ஆரம்பித்தார் என்றால், அந்தக் கட்சி உருப்படவே உருப்படாது! புத்தகம் படிப்பது, சிந்திக்க வைக்கும்... அறிவை ஊட்டும்... வரலாற்றைக் கூறும்... விஞ்ஞான கருத்துக்களை தெரிவிக்கும்... பண்பாட்டை வளர்க்கும்... நாகரிகத்தையும் அறிய வைக்கும்... கடமையை செய் என்று அறிவுரை சொல்லும்... கண்ணியத்தை வளர்க்கும்! உங்கள் தோழி பெரிய கெட்டிக்காரி!எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், தீவிரமாக யோசிக்க வேண்டும். அவசரமாக, உடனடியாக எடுத்துவிடக் கூடாது. அப்படி இல்லை என்றால், அது, தீமையில் போய் முடியும்! சிறையில் அடைப்பதே, கைதிகளுக்கு எந்தவித இன்பமும் இருக்கக் கூடாது என்பதற்கு தான்... அம்மாநில முதல்வர் ஒரு பெரும், 'குடி'காரர்... போதையில் இப்படி ஒரு திட்டத்தை சொல்லி இருப்பார் போலும்!அது, அவரது கனவாக மட்டுமே இருக்கும். இனி, நிஜத்தில் ஒருபோதும் நடக்கப் போவதில்லை!நல் வழி நடத்திச் செல்பவராக இருக்க வேண்டும். இன்ப, துன்ப உணர்வுகளை சரிசமமாக நடத்த வேண்டும். பொறுமை, இரக்க குணம் வேண்டும். வேறுபாடு காட்டாமல் பிறர் வாழ உதவ வேண்டும்!கண்டிப்பாக! 'போதும்' என்ற மனத் திருப்தியை வளர்த்துக் கொண்டவர்களுடைய வாழ்க்கை, பயனுள்ளதாகவும், சுவை உள்ளதாகவும் அமையும்!