கஞ்சாவுக்கு இங்கு தடையில்லை!
நம் ஊரில், கஞ்சா என்று சொன்னாலே, போலீசார் துரத்திப்பிடித்து, வழக்கு போடுவர். ஆனால், அசாம் மாநிலத்தில், டால்மியா பிளான்ட் இருக்கும் கிராமத்தில், பொது இடங்களில் கூட, கஞ்சா பயிரை சாகுபடி செய்கின்றனர். அங்குள்ள வீடுகளில் சர்வ சாதாரணமாக கஞ்சா செடிகளை வளர்க்கின்றனர்.ஆடுகளுக்கு, செடி, கொடிகளை நாம் உணவாக போடுவது போல், இந்த கிராமத்தில் இருப்பவர்கள், கஞ்சா செடிகளை அளிக்கின்றனர். — ஜோல்னாபையன்