உள்ளூர் செய்திகள்

உப்பு ஏரியில் மிதக்கலாமா?

அரபு நாடான எகிப்தில் கண்ணுக்கு எட்டிய வரை பாலைவனம் தான். பசுமையை பார்க்கவே முடியாது. இங்குள்ள சியான் ஒயாசிஸ் என்ற பகுதி, கடுமையான உப்பு தன்மையுடைய ஏரிகளை உடையது. உப்பு என்றால், சாதாரண உப்பு இல்லை; கடுமையான உப்பு. இதனால், நீண்ட காலம் வரை, அந்த பகுதிக்கு செல்வதையே பலரும் தவிர்த்து வந்தனர். ஆனால், சமீப காலமாக அந்த பகுதி, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறி விட்டது. இதற்கு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் கடுமையான உழைப்பு தான் காரணம். உப்பு ஏரியை, சிறு சிறு குட்டைகளாக மாற்றி, அதை சுற்றி மணல்களை குவித்து வைத்தனர். பின், மணல்களை அழகான குகைகளாக மாற்றினர்.அந்த பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணியர், உப்பு தண்ணீர் குட்டைகளின் அழகில் மனதை பறி கொடுத்தனர். போதிய பாதுகாப்பு அம்சங்களுடன், உப்பு தண்ணீர் ஏரியில், குறிப்பிட்ட நேரம் வரை, சுற்றுலா பயணியர் மிதக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.- ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !