தந்தை எவ்வழியோ, தனயனும் அவ்வழி!
சினிமா துறையில், தங்கள் தந்தையின் பாதையை பின்பற்றும் தனயன்களின் எண்ணிக்கை தற்போது, அதிகரித்துள்ளது. நடிகரின் மகன் நடிகராகவும், பாடகரின் மகன் பாடகராகவும் ஆகின்றனர். இவ்வரிசையில், புதிதாக அரங்கேறியுள்ளார் சித்தார்த்.சங்கர் மகாதேவனைப் போன்று, அவர் மகன் சித்தார்த்தும் பாடத் துவங்கி, மேடையில் வெளுத்து வாங்குகிறார். சமீபத்தில் தந்தையும், மகனும் இணைந்து பாடியபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.— ஜோல்னாபையன்.