கவிதைச்சோலை!
இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானோ?* இருண்டு கிடந்த சமூகத்தின்விடியல் கண்டான்...சின்னச் சின்ன ஆசைகளில்சிம்மாசனமிட்டான்!* கல்லை சிற்பமாக்கினான்...மின்னலை கைது செய்துமின்சாரம் கண்டான்!* சூரியன் தடுக்கி விழுகையில்சிந்தித்தான்...சிந்தித்ததெல்லாம்சித்திரமாக்கினான்!* இயற்கையின்முதுகில் சவாரி செய்துகணினிமயமாக்கினான்!* பூமியின் தோளில் வெயில் போர்த்தி,பகலின் மடியில் வெப்பச் சலனம்...அந்தி ஓய்வெடுத்தாலும்அடங்கவில்லை அனல் காற்று!* பூமியின் அக்கினி கதவுதிறந்து கொண்டதால்பிரபஞ்ச நுரையீரல்சொந்த மூக்கில் சுவாசிக்கிறது!* கடலின் சுவாசப்பை அடங்கிகாற்று ஓய்வெடுக்க சென்றதால்பற்றி எரிகிறது பனிமலை!* அனல் சொட்டச் சொட்டஅக்கினி மழையைஅள்ளித் தெளிக்கிறது இயற்கை...நீரின்றி காய்கிறது தேசம்!* வெப்பச் சலனம்...மழைக் காலம் பொய்த்துபோய்பூமி ரத்தக்களமாகிவாழ்வின் சாவுக்குவழி வகுத்து விட்டது!* காணி நிலம் கூட இல்லைமயிற்கூச்சங்களாய்வளர்ந்து நிற்கிறது கட்டடங்கள்!* ஏரிகள் குளங்களெல்லாம்தொழிற்சாலை...தண்ணீரில் ரசாயன கலவைவாழ்வியல் முழுவதும்வைரஸ் கிருமிகள்!* இயற்கையை வென்று விட்டதாய்ஆர்ப்பரிக்கிறான்...மருந்தை உணவாகஉட்கொள்வது தெரியாமல்!* இயற்கையின் பேரழிவுக்குமனிதன் எடுத்த ஆயுதம்விஞ்ஞான வளர்ச்சி...பருவநிலை மாற்றங்களால்கவலையுற்ற பூமாதேவிஅயர்ந்து கண்ணுறங்குகிறாள்இயற்கையோடு இயைந்த வாழ்வுஇதுதானா வென்று!— க.மோகன், அறந்தாங்கி.