கவிதைச்சோலை!
முரண்பாடு! சுட்டெரிக்கும்சூரியனைவசைபாடுகிறோம்அதுவே அடைமழையில்வெயில் வந்தால்வாழ்த்துப் பாடுகிறோம்!'தரிசு' என்று பெயர் சூட்டிதள்ளி வைக்கிறோம்அதுவேபுதையல் இருக்கும்பூமியாக இருந்தால்முத்தமிடுகிறோம்!புயலோடு காற்றடித்தால்புறம் பேசுகிறோம்அதுவே இதமான தென்றல் என்றால்வரவேற்கிறோம்!ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தால்ஆற்றாமையால் கொதிக்கிறோம்அதுவே அமைதியாக இருந்தால்தெய்வமாக துதிக்கிறோம்!துன்பம் வந்தால்தூற்றுவதும்இன்பம் வந்தால்பாராட்டுவதும்மனித இனத்தின்மாறாத கோட்பாடு!இரண்டுமே கலந்திருப்பதுதானே வாழ்க்கைபிறகென்ன இந்த முரண்பாடு!— வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.