கவிதைச்சோலை!
இவைகளும் குருவாகலாம்!பசிய இலைகள் பழுத்துப் போவதும்முதிர்ந்த இலைகள் உதிர்ந்து போவதும்புதிய தளிர்கள் முளைத்து வருவதும்இயற்கையின் நியதி என்பதைக் காட்டுவதால்மரம் கூட குருவாகலாம்!அழுக்கு துணிகளைச் சுமந்துஆற்றுக்கு போவதில் வருத்தமுமில்லைவெளுத்த துணிகளைச் சுமந்துவீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியுமில்லைகடமையைச் செய்வதில் மட்டும்கவனம் காட்டுவதால்கழுதை கூட குருவாகலாம்!வேண்டுதல் வேண்டாமை இல்லாமல்வெறுப்பு, விருப்பு காட்டாமல்ஆளுக்கு ஏற்றார்போல் ஆட்டம் போடாமல்தன்முன் நிற்பவரின் தன்மையைஅப்படியே காட்டும் நேர்மையால்கண்ணாடி கூட குருவாகலாம்!எரியும் ஒளி விளக்கைஎப்படி சாய்த்தாலும்கவிழ்த்தாலும்ஒளிச்சுடர் மட்டும்உயரப் பார்த்தே எரியும்உன்னத லட்சியத்தை சொல்வதால்விளக்கு கூட குருவாகலாம்!தன்னைக் கரைத்துசுற்றி இருப்பவர்களுக்குஉன்னத ஒளி தந்துஒப்பற்ற தியாகம் செய்வதால்மெழுகுவர்த்தி கூட குருவாகலாம்!காற்றின் அலைக்கழிப்பில்கலைந்து போனாலும்மீண்டும் மீண்டும் முயற்சி செய்துவலை பின்னும் கலையினால்சிலந்தி கூட குருவாகலாம்!உற்றுக் கவனிக்கிறஉயர்ந்த குணம் இருந்தால்கற்றுக் கொள்ள நிறைய உண்டுபெற்றுக் கொள்ள உங்களுக்குபிரியமுண்டா சொல்லுங்கள்!— இளசை சுந்தரம், மதுரை.