கவிதைச்சோலை!
என் உலகம் நீயாக!நிமிடத்திற்கு அறுபது நொடிகளல்லஅதற்கு மேல் ஒன்றைக் கூட்டினாலும்அங்கேயும் நீதான் வந்துதுடித்துக்கொண்டிருப்பாய்என் ஞாபக நொடிகளில்...ஒரு நாளைக்குஇருபத்தினான்கு மணியல்லஅதற்கு மேல் எவ்வளவு நீட்டித்தாலும்என் நினைவுகளின் நிரந்தர வாசியாக நீதான் இருப்பாய் எப்போதும்!இரவு பகல் இரு பொழுதுகளைத் தாண்டிமூன்றாவதாக ஒன்றைக் கண்டறிந்தாலும்நீதான் துடித்துக்கொண்டிருப்பாய்என் இதய கடிகாரத்திற்குள்! உறக்கம் விழிப்புஇரண்டையும் பிரதானமாகக் கொண்டுதான் இயங்குகிறது இப்பூவுலகம்!நான் உன்னை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறேன்!என் உலகம் நீயாக சுழன்றுகொண்டிருக்கிறாய்நான் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்உன்னால்! — சித்ராதேவி,சென்னை.