உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பொங்கலும் புது நெல்லும்!சளைக்காமல்மூணு போகம் விளைந்தமுத்தச்சி வயக்காடு!கோடை கதிரிலகுருவி தின்ன மிச்சம்கூடையில கிடைச்சா போதுமுன்னுசொல்லாம கொடுக்கும்கொடை வள்ளலு!அறுத்த மிச்சம்ஆடும், மாடும் அசை போடும்ஆசைப்பட்ட ஆகாயம்அடுத்த விளைச்சலுக்குஅடி போடும்!வாய்க்காலில் வரும்முறை தண்ணி வஞ்சமில்லாமபக்கத்து காட்டு பயிரையும்பாசத்தில நனைச்சு போகும்!நண்டு, தவளை குடியேறிநட்டவனுக்கு நன்றி சொல்லும்வரப்பு எல்லை எதிரிய கூடஇஷ்டப்பட்டு சுமந்து செல்லும்!வாங்கிய கடனுக்குவளர்ச்சி இல்லாம போனாலும்வரப்பும், வயலும்தளர்ச்சி அடஞ்சதில்ல!குச்சி வீடெல்லாம்மச்சு வீடா மாறிப் போனதுலமாதம் மும்மாரி பெஞ்ச மழைவருஷக்கணக்கா வராம போச்சு!பொங்கலுக்கு பொங்கல்புது நெல்லு தந்தவிவசாயி வீட்டில இப்பபொங்கல் வைக்க கூடபுது பானை இல்ல!ஆனாலும்விதை நெல்ல விதைக்காமவிடியலே வருவதில்லவிவசாயிக்கு மட்டும்!க. அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !