கவிதைச்சோலை!
கண்ணீரை துடையுங்கள்!வெற்றி பெறுவோம்என்ற எண்ணம் தான்ஒவ்வொரு நாளையும்மகிழ்ச்சியாக்குகிறது!நாளை வாழ்வோம்என்ற நம்பிக்கை தான்இன்றைய நாளைஇனிமையாக்குகிறது!எல்லாம் மாறும்என்ற சிந்தனை தான்வாழ்வில் பற்றைஉருவாக்குகிறது!சுற்றமும், நட்பும்உடன் வரும்போது தான்மலையளவு துன்பமும்கடுகளவாகிறது!இதுவும் கடந்து போகும்என்ற உண்மை தான்எதிலும் அடக்கத்தைகொண்டு வருகிறது!தேவைப்படுவோருக்குஉதவுதல் தான்வாழ்க்கை பயணத்தின்சுகமான சுமையாகிறது!அச்சம் இல்லாதஅமைதி தான்எந்த காலத்திலும்நிஜமான துணையாகிறது!சிறிதும் துவளாதமன உறுதி தான்வாழ்வில் சாதிக்கும்வல்லமை தருகிறது!கு. காந்திராஜா, சென்னை