உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நீ என் லட்சியம்...* யாசகன் போலகையேந்தி நிற்கிறேன்...அதற்காகவேனும் என்னை சம்மதி!* புரியாத தரை நிலவாய்வீசத் தெரியாத தென்றலாய்பூக்களுக்கு இடம் கொடாத பூமியாய்நீ வலம் வருகையில்விக்கித்து அழுகிறேன்...உன் மீதான அன்பைதாங்க முடியாமல்...* என் பிரியத்தை இறக்கி வைக்கபரந்து விரிந்த ஒரு உள்ளம் தேவைகண்ட இதயத்திலெல்லாம் போட்டு வைக்கஎன் காதல் ஒன்றும்சூப்பி எறியப்பட்ட பனங்கொட்டையல்ல!* உடல் முழுக்க நாணம் சுமந்துபார்த்தும் பாராமல்நீ போகும் ஒவ்வொரு நிமிடமும்வேர்த்து விறு விறுத்துசித்தமே கலங்கிப் போகிறதெனக்கு!* உனக்கு வேண்டுமானால்நிராகரித்தல் என்பதுசட்டை பொத்தானை மாட்டுவது போன்றுஎளிதானதாக இருக்கலாம்அது எனக்குநரக நெருப்பு சிந்தும்அக்னி ஜுவாலை மாதிரியான ஒன்று!* சோற்றில் கல் கிடந்தால்எடுத்து வீசிவிட்டு சாப்பிடும்பழக்கம் போலத்தான் - உன்எதிரான அணுகுமுறையையும் அனுசரித்துஉன் பின்னால் சுற்றுகிறேன்!* தன்னம்பிக்கையென்றஅந்த ஒப்பற்ற கண்ணாடியின் மேல்குண்டு விழுந்து விடக் கூடாதுஏனெனில் —ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கிறலட்சிய வெறி நீர்த்து போகுமே!* நீ என் லட்சியம்!* ஆகவே தான் சொல்கிறேன்என்னை நீ சம்மதிஅதுவே எனக்கு வெகுமதி!— அதிரை.இளையசாகுல், துபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !