உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! பயணத்திற்கு உதவாத மாய கப்பல்!

கனவு போலத்தான்வாழ்க்கை!கனவு விடிந்தால்கரைந்து போகும்வாழ்க்கை கனவுகலைந்து எழுந்தால்உடன் நடித்த ஒருகதாபாத்திரம் காணாமல்போயிருக்கும்!பணம், பதவி, மரியாதையெல்லாம்நாம் உண்ணும் உணவைப் போல்ருசிக்க, ருசிக்க பசிக்கும்...ஆனால், நிரந்தரமின்றி வீணாய்ப் போகும்!ஆயிரம் பேர் சூழ்ந்திருக்கநான் யார் தெரியுமா?என்று கேட்கும் ஆணவம்அதே கேள்வியைதனிமையில் தன்னை நோக்கிகேட்க, 'நான்'காணாமல் போயிருக்கும்!காலுக்கு கீழ் அடிமையைப் போல்கிடக்கும் பூமிநிரந்தரமானது!நானே எஜமான் எனமார் தட்டி திரிந்தவன்மக்கி, மண்ணாய் அதேபூமியோடு ஐக்கியமாவதுவாழ்வியல் சூத்திரம்!உன்னை எரிக்கலாம்அல்லது புதைக்கலாம்இதுவரை நீ சேர்த்து வைத்தசொத்துகள்சொந்தங்கள்பதவிகள்அதிகாரங்கள்தம்பட்டங்கள்அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல்ஆசிர்வாதங்கள்ஏதேனும் துணை வருமா?தீ சுடும்வாழ்ந்தோர் சொல் கேட்டும்தெளியலாம்தொட்டுப் பார்த்தும்பாடம் கற்கலாம்!ஆறடி நிலம் கூடஉறுதியில்லாத வாழ்வில்கொண்டு போவதற்குஎன்ன இருக்கிறது?வாழ்ந்த நாளில்உனக்கு பயந்து எத்தனை பேர்உன்னுடன் வந்தனர்என்பது பெரிதில்லை!மனிதனாய் பிறப்பது எளிதுமிருகமாய் வாழ்வது எளிதுதெரு நாயைப் போல்செத்துப் போவது எளிது!நீமனிதனா மிருகமா?உன் கடைசி யாத்திரையில்கண்ணீருடன் வருகிறவர்களின்எண்ணிக்கை நீ வாழ்ந்தவாழ்க்கையை சொல்லிவிடும்!எஸ்.ஏ. சரவணக்குமார், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !