உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - எண்ணங்கள்!

நேர்மறை எண்ணங்கள் என்றுமே தோற்பதில்லைஎதிர்மறை எண்ணங்கள் உன்னுள் சிக்காதவரை! எதுவும் கடந்து போகும் எண்ணம் விதையுங்கள்மீளாத துயரமும் கரைந்து போக எத்தனிக்கும் மனம்!முடக்கும் எதிர்மறை எண்ணங்கள் தவிருங்கள்இயக்கும் நேர்மறை எண்ணங்கள் சூடுங்கள்! உயர்ந்த எண்ணங்களில்உறக்க சிந்தியுங்கள்அதுவே வாழ்க்கையில் உயர்வின் வழிகாட்டி! நேர்மறை எண்ணங்கள் மையமிடும் உள்ளத்தில் வாழ்வின் முன்னேற்றம் வடிவமாக உருவாகிறது! சொல்லிலும் செயலிலும்பதிவிடும் நல் எண்ணமேநாளைய சாதனைக்கான தொடக்கத்தின் ஆதாரம்! நேர்மறை சிந்தனையில் மன அழுத்தம் குறையும்அதன் சக்தி உடலுக்கும்மனதிற்கும் வலுசேர்க்கும்! விவேகமாக செயல்படும்சிந்தனை தொடக்கமேதோல்வி நிலையானதல்லஎன்பதை உணர்த்தும்!— வி.சுவாமிநாதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !