உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!

குழந்தைகளேநாட்டின் கண்கள்இவர்களை கொண்டாடும் நாடே எதிர்காலத்தில் வளமடையும்! குழந்தைகளே நாட்டின் துாண்கள்...ஊட்டச்சத்து குறைபாடின்றி வளர்ப்பது பெற்றோர்கள்அரசின் கடமையாகும்...துாண்கள் வலிமையானால் எதிர்காலம் வசந்தமே! குழந்தைகளே நாட்டின் ஒளி...பாலினப்பாகுபாடின்றி கல்வி ஒளி ஏற்றி வைத்தால்நாட்டிற்கு என்றும் ஏற்றமே! குழந்தைகளேநாட்டின் வேர்கள்...இளவயது திருமணங்களால்வேர்கள் அழுகிவிடுகின்றனவலிமையான வேர்களே நாட்டை நிமிரச் செய்யும்! குழந்தைகளே நாட்டின் அச்சாணி...குழந்தைகளை பாதுகாத்து துாக்கி வைத்துக் கொண்டாடாத சமூகம்அச்சாணி இல்லாதேராகக் கவிழுமே! * குழந்தைகள் தினத்தில் மட்டுமல்லஒவ்வொரு நாளும்குழந்தைகளைக் கொண்டாடி உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வோம்...உற்சாகமாக பறக்க ஊக்குவிப்போம்! — வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !