உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - வானவில் வாழ்க்கை!

எத்தனை நிறங்களில் மனிதர்கள்அத்தனை புதியது உணர்வுகள்அடையாளம் கண்டுக்கொள்ளமுடியாமல் மறைக்கும் முகமூடிகள்! சிரிப்பை ஏந்தும் முகங்களும்விஷ வார்த்தைகள் கொண்டு தாக்கலாம்சிந்தனை கோர்த்த முகங்களும் சில்லறையாக நடக்கலாம்! பெரியவர் இவர் என வணங்கினால்சிறுமை குணங்கள் வெளிப்படும்அருமை என்று நினைத்தவர்வெறுமை என்றும் தெரியலாம்!கடுமை காட்டும் முகம் எனதள்ளிக் கொஞ்சம் போகையில்உள்ளம் பொன் என உணரலாம்! ஊர் மெச்சும் குணங்களை காணலாம்கல்லுாரி பாடங்கள் புரியலாம்மனதின் கோலங்கள் புரிவதில்லைஎத்தனை பாடங்கள் படித்தாலும்மனிதனை உணர்வதும் இல்லை! உறவோ, நட்போ இறுதி வரை தொடர்ந்தால் மனதிற்கு ஆறுதல்மனித வண்ணங்கள் பலவானாலும் வானவில்லாய் வாழ்க்கை சுகமே! —  அகிலா ஜ்வாலா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !