கவிதைச்சோலை: நாளும் நன்றி சொல்வோம்!
அன்பையும்பண்பையும்அன்றாடம் சொல்லித்தரும் அம்மாவிற்கு நன்றி சொல்வோம்!அறிவையும்அறநெறியையும்அவ்வப்போது சொல்லித்தரும்அப்பாவுக்கு நன்றி சொல்வோம்!பாசத்தையும்நேசத்தையும்பண்போடு சொல்லித்தரும் பாட்டிக்கு நன்றி சொல்வோம்!தானத்தையும் தர்மத்தையும்தவறாமல் சொல்லித்தரும்தாத்தாவுக்கு நன்றி சொல்வோம்!எண்ணத்தையும்எழுத்தையும்இடைவிடாமல் சொல்லித்தரும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்!நேர்மையையும்நியாயத்தையும்நித்தமும் சொல்லித்தரும்நீதி தேவதைக்கு நன்றி சொல்வோம்! சத்தியத்தையும்சமாதானத்தையும் சரிவர சொல்லித்தரும்சான்றோருக்கு நன்றி சொல்வோம்!உழைப்பையும்உண்மையையும்உறுதியுடன் சொல்லித்தரும்உத்தமர்களுக்கு நன்றி சொல்வோம்!நன்மைகளையும்நலங்களையும்நல்வழியில் சொல்லித்தரும்நல்லவர்களுக்குநாளும் நன்றி சொல்வோம்!— க. அழகர்சாமி, கொச்சி.தொடர்புக்கு : 94954 67076