உள்ளூர் செய்திகள்

மத்திய பாதுகாப்பு படையில் 3073 எஸ்.ஐ., பணியிடங்கள்

துணை ராணுவத்தை சேர்ந்த பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 'சப்-இன்ஸ்பெக்டர்' பதவியில் டில்லி போலீஸ் 212, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) 1029, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) 223, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.,) 233, தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) 1294, சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 82 என மொத்தம் 3073 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு வயது: 20-25 (1.8.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், கரூர், துாத்துக்குடி. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 16.10.2025 விவரங்களுக்கு: ssc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !