உள்ளூர் செய்திகள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 உதவியாளர் பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.ஐ.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: உதவியாளர் பிரிவில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் தாய்மொழி தெரிந்திருப்பது அவசியம்.வயது: 1.1.2024 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 15.2.2024விபரங்களுக்கு: nationalinsurance.nic.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !