ஐ.டி.ஐ., முடித்தவருக்கு இரும்பு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்படும் இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) அறிவிப்பு வெளியாகியுள்ளது.உதவியாளர் 34, ஆப்பரேட்டர்(எலக்ட்ரிக்கல், மைனிங்) 20, டெக்னீசியன் பாய்லர் 20, அசிஸ்டென்ட் மேனேஜர் 10, மெடிக்கல் ஆபிசர் 14, மைனிங் போர்மேன் 6 உட்பட 108 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவை பொறுத்து எம்.பி.பி.எஸ்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.வயது: 7.5.2024 அடிப்படையில் மெடிக்கல் ஆபிசர் 34, மற்ற பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: பதவி வாரியாக ரூ. 700, ரூ. 500, ரூ. 300 என மாறுபடும்.கடைசிநாள்: 7.5.2024விவரங்களுக்கு: sail.co.in