உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக அரசு பஸ் டயர் வெடித்து விபத்து தொழிலாளி பலி

 கர்நாடக அரசு பஸ் டயர் வெடித்து விபத்து தொழிலாளி பலி

-நமது நிருபர்-: திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து மேல்மருவத்துாருக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற கர்நாடக அரசு பஸ், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த சாலையூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்புறமுள்ள வலது பக்க டயர் வெடித்து நிலை தடுமாறியது. அந்த சமயத்தில், கீழ்பென்னாத்துாரிலிருந்து, திருவண்ணாமலை நோக்கி எதிரே வந்த பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி தீபன், 29, ஓட்டி வந்த டி.வி.எஸ்., பைக் மீது பஸ் மோதியது. இதில், தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி