உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பயன்படுத்தாத டேட்டாவுக்கும் கட்டணம் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து ஆலோசனை

பயன்படுத்தாத டேட்டாவுக்கும் கட்டணம் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து ஆலோசனை

புதுடில்லி::நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ்., சேவைகளுக்கு, தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 'டிராய்' பரிந்துரைத்து உள்ளது.இந்தியாவில் கிட்டத்தட்ட 112 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 65.90 கோடி பேர், ஸ்மார்ட்போன் பயனர்களாக உள்ளனர். ஸ்மார்ட்போன் அல்லாத பிற சாதாரண போன்களை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் பலர், தாங்கள் பயன்படுத்தாத டேட்டா சேவைகளுக்கும் கட்டணம் செலுத்துவதாக புகார் கூறி வந்தனர். இதுகுறித்து, டிராய் வெளியிட்டுள்ள ஆலோசனை குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:தற்போது பயன்பாட்டில் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுடன், அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ்., ஆகிய சேவைகளுக்கு, தனித்தனியே மற்றும் ஒருங்கிணைந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருவது அவசியம். தற்போது பயன்பாட்டில் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள், சரியான கட்டண திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் தடையாக இருப்பதாக சந்தாதாரர்கள் கருதுகின்றனர். மேலும், சிறப்பு கட்டண திட்டங்கள் மற்றும் 'காம்போ ரீசார்ஜ்' திட்டங்கள் போன்றவற்றின் செல்லுபடியாகும் காலத்தை, தற்போதுள்ள 90 நாட்கள் என்பதிலிருந்து, அதிகரிக்க வேண்டும். புதிய மாற்றங்கள் அவசியமென கருதுவோர், ஆகஸ்ட் 16ம் தேதிக்குள்ளாகவும்; மாற்றங்கள் தேவையில்லை என கருதுவோர், ஆகஸ்ட் 23 தேதிக்குள்ளாகவும் தங்கள் கருத்துகளை, டிராய் இணையதள முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சாதாரண போன்களை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் பலர், தாங்கள் பயன்படுத்தாத டேட்டா சேவைகளுக்கும் கட்டணம் செலுத்துகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sankara Subramaniam
ஜூலை 31, 2024 09:44

Like add on food ges in VB train W/o sms, games other non essential services reduce tariff


rama adhavan
ஜூலை 30, 2024 17:55

கூகிள்இல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பேச நிமிடம் 2 சென்ட் ரூ. 1.75. ஆனால் ஜியோவில் சர்வதேச ரோமிங் 30 நாளுக்கு ரூ. 5000. இது கொள்ளை.


Barakat Ali
ஜூலை 30, 2024 15:30

சிலபேர் வீட்டில் அனைவருக்கும் பொதுவாக ஒரு தாராள wifi வைத்திருப்பார்கள் ..... அது அனைவருக்கும் போதுமானதாக இருக்கும் ... வீட்டில் இருக்கும் வரை அதிக டாட்டா கொடுக்கும் ஆப்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் .... அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் அதிகம் டாட்டா தேவைப்படாது .... அப்போது டாட்டா பயன்படுத்தலாம் .... இருப்பினும் வெறும் அழைப்பிற்கு மட்டும் ரீசார்ஜ் திட்டம் யாரும் கொடுக்காதது ஒரு அநியாயமே .....


Gnanam
ஜூலை 30, 2024 22:52

Oவுட்கோயிங் சம்ஸ் வசதி சில வெளி நாடுகளில் இல்லை...


Barakat Ali
ஜூலை 30, 2024 14:41

இதை டிராய் எப்போதோ கொண்டுவந்திருக்க வேண்டும் .......


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 29, 2024 09:44

முதலில் இலவசமாக ஆரம்பித்து அப்புறம் வெளிப்படையாகவே கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது ஜியோ. இது அனைவரும் அறிந்ததே. அப்புறம் எனக்கு அழைப்பு வசதி மட்டுமே போதும் என்றால் அதற்க்கு வாய்ப்பில்லை. தேவையோ இல்லையோ கட்டாயம் நான் பயன்படுத்தாத டேட்டாவிற்கும் காசு கட்ட வேண்டும். இது எப்படியான கொள்ளை. இதை ட்ரைய் போன்ற அரசு அமைப்புகள் இவ்வளவு காலம் கண்டும் காணாமல் இருப்பதன் காரணம் அங்கும் உள்ள ஊழல்தான். எப்படியோ அம்பானி நமது பணத்தில் மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துவிட்டார். ஆனால் கொள்ளையடித்து சம்பாதித்த பணம் நிலைக்காது என்பார்கள்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி