உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பேடிஎம் தலைவர் ராஜினாமா

பேடிஎம் தலைவர் ராஜினாமா

புதுடில்லி: 'பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்' நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அதன் தலைவர் விஜய் ஷேகர் ஷர்மா விலகியுள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்தை வரும் மார்ச் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு டிபாசிட்கள் பெறுவது மற்றும் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்து உள்ளது. இந்நிலையில், அதன் தலைவர் பதவியிலிருந்து விஜய் ஷேகர் ஷர்மா விலகியுள்ளார். விரைவில் புதிய தலைவர் நியமிக்கபடுவார் என்றும், மாற்றியமைக்கப் பட்ட இயக்குனர் குழு எதிர்கால வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேடிஎம் வங்கியின் இயக்குனர் குழுவில் 'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா' முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் ஸ்ரீதர் உள்ளிட்ட நான்கு பேர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை