உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிற்கு நுழைய முயன்ற வங்க வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர்

இந்தியாவிற்கு நுழைய முயன்ற வங்க வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக, நுழைய முயன்ற 11 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டனர். திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த சில நபர்கள் எல்லை தாண்டி வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அகர்தலா ரயில் நிலையத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் சேர்த்து, மொத்தமாக 11 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்தியாவிற்குள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக, 11 பேரும் நுழைய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 11 பேரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சென்னை, மும்பை, கோல்கட்டாவுக்கு வேலை தேடி, வந்ததாக, போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.கடத்தல் செய்வதற்காக வந்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஜூன் 27ம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக அகர்தலா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 02:20

முமைதா பேகத்தின் லாங் டேர்ம் ஏற்பாடு ........


M Ramachandran
ஜூன் 30, 2024 19:28

மம்மதா மேடத்திற்கு தெரியாமல் வர முயற்சித்திருப்பார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 11:32

அந்தம்மா ஆசிகளுடன்தான் நடக்குது .. பச்சப்புள்ளையா இருக்கீங்க .... இதுனாலதான திராவிடம் கண்ணுல விரலை விட்டு ஆட்டுது ....


Sundar
ஜூன் 30, 2024 19:06

எண்ணிலடங்கா குடியேறிகள் இருக்கின்றனர். விரைவில் களை எடுக்க வேண்டும்.... ம் ம் என்ன செய்ய போகின்றனர்.... பார்ப்போம்.


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2024 18:16

Worst Bengal Waste Bengal ல் 1.5 கோடி வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள் ஆதார் கார்டு ரேஷன் கார்டு எலெக்ஷன் id கார்டுடன் அவர்களை என்ன செய்யப்போகின்றாய்


N Sasikumar Yadhav
ஜூன் 30, 2024 18:01

அகர்தலா பாஜக ஆட்சியில் இருக்கிறது அதனால் கள்ளக்குடியேறிகள் கைது செய்யப்படுகிறார்கள் ஆனால் மம்முதா ஆட்சியில் ஓட்டுப்பிச்சைக்காக குடியுரிமை கொடுக்கப்படுகிறது


V GOPALAN
ஜூன் 30, 2024 15:58

Soon Tamilnadu may become Like Bangladesh Occupied Tamilnadu. Central Govt should be more vigil. Dmk 40 seats , hidden agenda by vulnerable is to make Tamilnadu as terror base. Slowly they are migrating from kerala


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை