உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக, ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vee srikanth
ஜூன் 27, 2024 15:24

இது மாதிரி ஆபாத்தான சூழ்நிலையில் வேலை செய்யும் ராணுவ வீரர்களை வாழ்த்துவோம் . நம் கள்ள சாராய குடிகார மக்களுக்கு இழப்பு நிதி வழங்குவோம்


Ramaswamy
ஜூன் 27, 2024 12:59

Security forces must be given power Shoot at Sight, then only Terrotism can be controlled in Kashmir. Security force will have more confident and feel safe also. Government should give much more value and respect for our security forces. They must be equiped with modern sophisticated weapon also. English Era guns should be erradicated.


Ramesh Sargam
ஜூன் 26, 2024 21:25

நடு நாட்டுக்குள் இருக்கும் பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் கூட அப்படியே செய்யவேண்டும்.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 18:30

கான் கிராஸ் கட்சி ஆட்சியில் பாதுகாப்பு படையினர் கைகள் கட்டப்பட்டு இருந்தன.... மோடி அவர்கள் ஆட்சியில் தக்க பதிலடி உடனடியாக கொடுக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்