உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கியூஆர் கோடு ஸ்கேனர் வைத்து பணம் வசூலிக்கும் பூம் பூம் மாடு

கியூஆர் கோடு ஸ்கேனர் வைத்து பணம் வசூலிக்கும் பூம் பூம் மாடு

பெங்களூரு: இப்போதெல்லாம் பணத்தை கையில் யாரும் எடுத்து செல்வதில்லை. எதுவாக இருந்தாலும், 'போன் பே' அல்லது க்யூ.ஆர். கோட், ஸ்கேனர் பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய மால்களாக இருந்தாலும், சிறிய சில்லறை கடையாக இருந்தாலும் பண பரிமாற்றம் செய்ய க்யூ.ஆர்.கோட் மூலம் வழியாகவே வர்த்தகம் நடக்கிறது. இந்த வகையில், பிச்சை எடுப்போர் வசூலிக்க யாரும் பணம் வைத்திருப்பதில்லை. இதனால் பிச்சை எடுப்பவர்கள் கூட நுாதன முறையை சிந்திக்க தொடங்கி விட்டனர். 'பூம்பூம்' மாட்டை வைத்து பிச்சை எடுக்க, அதன் தலையில் க்யூ.ஆர். கோடு ஸ்கேனர் அட்டையை மாட்டி வைத்துள்ளனர். பணம் தருவோர் இதை ஸ்கேன் செய்து, பணத்தை செலுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ