உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பஸ்சில் வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பரபரப்பு

டில்லியில் பஸ்சில் வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பரபரப்பு

புதுடில்லி: டில்லியில் பேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் அங்கு நள்ளிரவில் பரபரப்பு காணப்படுகிறது.டில்லியின் நரேலா என்ற பகுதியில் உள்ள சான்சல் பூங்கா நகரிலிருந்து வந்த தொலைபேசியில் பேசிய நபர், டில்லி நங்கலோய்- நஜப்கார் சாலை பகார்வாலா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்சில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.தகவலறிந்த டில்லி போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் , தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ