உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசிங்கமா போச்சு குமாரு... ஆதங்கப்படுகிறார் பினராயி விஜயன்!

அசிங்கமா போச்சு குமாரு... ஆதங்கப்படுகிறார் பினராயி விஜயன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'வயநாடு நிவாரணப் பணிகள் குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறது. இதனால், கேரள மக்களுக்கும், அரசிற்கும் உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டு விட்டது' என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.வயநாடு துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 359 பேரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ரூ.2.76 கோடி செலவிட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. ஒவ்வொரு உடலுக்கும் அடக்கம் செய்ய ரூ.75 ஆயிரம் செலவானதாக கணக்கு தரப்பட்டுள்ளது. உடல் அடக்கம், ஊனமுற்றோர் மறுவாழ்வு போன்ற செலவினங்களுக்கு எழுதப்படும் செலவினங்களை மத்திய அரசு அப்படியே முழுவதுமாக வழங்கி விடும் என்ற எண்ணத்தில், இப்படி மிகைப்படுத்தி கணக்கு எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2v792ee&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசிற்கு அவப்பெயர்

இந்நிலையில், இன்று(செப்., 21) கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளா அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் செலவு கணக்கு குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறது. மத்திய உதவியை நியாயமற்ற முறையில் பெறுவதற்கு முயற்சி நடப்பதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனால், கேரள மக்களுக்கும், அரசிற்கும் உலக அளவில் மதிப்பு போய்விட்டது. அரசிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த அறிக்கைகள் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இழிவுபடுத்துவது நோக்கம்

இதன் பின்னணியில் எந்த வகையிலும் மாநில அரசை இழிவுபடுத்துவதே நோக்கமாக இருந்தது. பேரிடர் ஏற்பட்டால் குறிப்பேடு தயாரிப்பது அமைச்சர்கள் அல்ல, மாறாக அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் தான். இந்த நிபுணர்கள் தயாரித்த தரவுகளை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டது. குறிப்பாணையில் உள்ள புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல, ஆனால் திட்டமிடப்பட்ட மதிப்பீடுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
செப் 21, 2024 19:49

ரொம்பதான் யோக்கியன் மாதிரி பேசுறாரு. தங்கடத்தால் மோகினியுடன் கூட்டு களவாணி மற்றும்யித்தியாதி. ஊதகஙகள்நம் ஸ்டாலின் முறையாய் பின்பற்ற வேண்டியது வேற்காட்டைய்ய நாய்க்கு கரித்துண்டு வீசுவது போல் அப்புறம் உஙகள் கவலை தீர்ந்து விடும். உஙகள் மாநிலத்திலும் திருட்டு திராவிடத்தை பரப்ப வேண்டியது தானெ. மக்கள் மூளையய மழுங்கி உஙகள் பின்னாலென வருவார்கள். ஒரு சந்தேகம் இருக்கா கேரளமக்கள் படித்தவர்கள் அவர்களை புல்லு கட்டு கொடுத்து ஏமாற்ற முடியாது என்றா? ஒரு முறை முயற்சிக்கவும் தமிழ்நாட்டிலுள்ள ஜுரம் கேரளத்திற்கும் பரவ ஒரு சான்ஸு இருக்கலாம்


karupanasamy
செப் 21, 2024 18:11

இப்பவும் அவ்வளவு செலவு ஆகவில்லை என்று சொல்லவே மாட்டேங்குறானே ஏலேய் வெங்கடேசு நீயாச்சும் சொல்லு... இறந்த ஒருவரை அடக்கம் செய்ய எவ்வளவு செலவுபண்ணுனதா கணக்கு காட்டி இருக்கீங்க.


என்றும் இந்தியன்
செப் 21, 2024 18:00

RSS தானே உடல்களை அடக்கம் செய்தது அதுக்கு உமக்கு எதற்கு ஒரு அடக்கத்திற்கு ரூ 75,000 பணம் தரணும் சொல்லு. RSS தானே ஒன்றும் எதிர்பார்க்காமல் இந்த பணிக்கு சுயமாக வந்தது.


ஆரூர் ரங்
செப் 21, 2024 17:35

சொப்னா கூட தனது துறையில் நிபுணர்தானே விஜய்?


Mali
செப் 21, 2024 16:43

நான் வேணும்னா 5 முழம் கயறு வாங்கித்தரவா ?


RAMAKRISHNAN NATESAN
செப் 21, 2024 15:59

\\ இதனால், கேரள மக்களுக்கும், அரசிற்கும் உலக அளவில் மதிப்பு போய்விட்டது. அரசிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. //// இல்லன்னா ரொம்ப பெத்த பேரு ...... .


P. VENKATESH RAJA
செப் 21, 2024 15:52

இந்த எண்ணம் ஊழல் செய்யும் போதே வந்திருக்க வேண்டும்.


Sundar R
செப் 21, 2024 15:43

வயநாடு விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை கேரள மக்களே வருத்தப்பட்டு சொல்கிறார்கள். மிகைப்படுத்திய தொகையைக் குறிப்பிடுகிறார்களே என்பதுதான் பினராயி விஜயனின் ஆதங்கம் என்று தோன்றுகிறது.


Srinivasan Ramabhadran
செப் 21, 2024 15:19

எல்லா அரசியல் கட்சிகளுக்கும், எனக்கு வந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை