உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிருங்கேரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு

சிருங்கேரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு

சிக்கமகளூரு: 'பிரசித்தி பெற்ற சிருங்கேரி சாரதாம்பா கோவிலில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதாரும் அணிந்து வர வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாரதாம்பா கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, துண்டு, பெண்கள் சேலை - ரவிக்கை, துப்பட்டாவுடன் சுடிதார், தாவணி அணிந்து வர வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறி வருவோர், கோவிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை