உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய அனல்மின் நிலைய அதிகாரி படுகொலை

தேசிய அனல்மின் நிலைய அதிகாரி படுகொலை

ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் ஹசாரிபாக் மாவட்டத்தின் கேராதாரியில் நிலக்கரி சுரங்கத்தையொட்டி தேசிய அனல் மின் நிலையத்தின் பணிகள் நடக்கின்றன. இதன் துணை பொது மேலாளராக குமார் கவுரவ், 42, என்பவர் பணியாற்றி வந்தார். ஹசாரிபாக் மாவட்டத்தின் கட்கம்தாக் பகுதியில், குமார் கவுரவ் நேற்று நிலக்கரி சுரங்கத்துக்கு காரில் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை வழிமறித்தனர். பின், குமாரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்திற்குப்பின், குமார் கவுரவின் கார் டிரைவரும் தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை