உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபாநாயகரை சந்தித்தார் ராகுல் எமர்ஜென்சி பேச்சுக்கு எதிர்ப்பு

சபாநாயகரை சந்தித்தார் ராகுல் எமர்ஜென்சி பேச்சுக்கு எதிர்ப்பு

புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, எமர்ஜென்சி தொடர்பாக லோக்சபாவில் பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டார்.லோக்சபா சபாநாயகராக, ஓம் பிர்லா நேற்று முன்தினம் பதவியேற்றார். அப்போது, 1975ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக அவர் பேசினார்.இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் ராகுல், ஓம் பிர்லாவை நேற்று சந்தித்தார். அவருடன், சமாஜ்வாதி யின் தர்மேந்திர யாதவ், டிம்பிள் யாதவ், தி.மு.க., வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மிசா பார்தி, திரிணமுல் காங்.,கின் கல்யாண் பானர்ஜி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் பிரேமசந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பு குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது:எதிர்க்கட்சித் தலைவராக ராகுலை நியமித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது.அப்போது, சபையை நடத்துவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. சபாநாயகராக பதவியேற்றபோது, எமர்ஜென்சி குறித்து ஓம் பிர்லா பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. அது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பானது என்பது தெரியபடுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.இந்தப் பிரச்னை தொடர்பாக கட்சியின் சார்பில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, வேணுகோபால் தனியாக கடிதம் அனுப்பிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூன் 28, 2024 07:42

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது குறித்து பேசிக்கொண்டு எதிரி கட்சிகளை முடக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளை ஓடிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தொடருகிறது. உதாரணமாக நீதி மன்றங்கள், நிர்வாகம், சட்டம், இயற்றுபவர்கள் ஆகியோர் ஒரு சில குறிப்பிட்டவர் நபர்களுக்காகவே பாடுபடுகின்ற நிலை உள்ளது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை