உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.11 கோடி பரிசு; மஹாராஷ்டிரா அரசுக்கு கடும் எதிர்ப்பு

கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.11 கோடி பரிசு; மஹாராஷ்டிரா அரசுக்கு கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை, டி - 20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மஹாராஷ்டிரா அரசு 11 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்ததை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாராட்டு

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், டி - 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் சூர்ய குமார் யாதவ், சிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோரை நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா தலைமை செயலகத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கவுரவித்து பாராட்டினார்.அப்போது அவர், 'உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மஹாராஷ்டிரா அரசு சார்பில் 11 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, அறிவித்தார். இதற்கு, உத்தவ் சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இது தொடர்பாக மஹாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வாதேட்டிவர் கூறுகையில், “மாநில அரசின் கருவூலத்தில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கு ஏன் பரிசு அளிக்க வேண்டும்? இதன் வாயிலாக, மாநில அரசின் கருவூலத்தை காலியாக்கும் முயற்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது,” என்றார்.

மகிழ்ச்சி

இதேபோல் உத்தவ் சிவசேனாவின் மேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தான்வே கூறுகையில், “உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் சாதனையை அனைவரும் பாராட்டி, பரிசளித்து வருகின்றனர். எனவே, மாநில அரசின் கருவூலத்தில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கு பரிசளிக்க வேண்டிய தேவை இல்லை. ''அதற்கு பதிலாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தன் சட்டைப் பையில் இருந்து பரிசுத்தொகையை அளிக்கலாம்,” என்றார்.இதற்கு பதிலளித்த பா.ஜ., மேலவை உறுப்பினர் தாரேகர் கூறுகையில், “நாடு முழுதும், இந்திய அணியின் வெற்றியை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்க்கின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

skv srinivasankrishnaveni
ஜூலை 08, 2024 05:43

விளையாட்டுவீரர்களை என்கரேஜ் செய்யட்டு இனிய வார்த்தைகளால் ஆனால் மக்கள்கட்டும்வரிப்பணத்துலேந்து தரவேக்கூஊடாது பிகாஸ் அவர்கள் காசுக்கேதான் ஆடுறாங்க தேச சேவையா செய்றாங்க ப்ளீஸ் நன்னா யோசிக்கவும்


R Hariharan
ஜூலை 07, 2024 12:00

இந்த பணம் வேறு ஏதற்காவது பயன் ஆகும். பல இடங்களிருந்து பரிசு வாங்கி இருக்குகிறார்கள். அரசு பணத்தை வீணாக்காதீர்கள்.


vijai
ஜூலை 07, 2024 11:01

கொடுத்தது பத்தாதா இவங்க வேற கொடுத்திருக்கார்


Srinivasan Ramabhadran
ஜூலை 07, 2024 10:48

This is an unwanted gift bestowed on cricketers. They already earn huge income from cricket board/ match organisers / match fees/ from auctions and other awards from corporate


தமிழ்வேள்
ஜூலை 07, 2024 10:37

கிரிக்கெட் தற்போது சூதாட்டம் வியாபாரம் ஆகிவகட்டது.இது அரசு நடத்துவதும் இல்லை.. இவர்களுக்கு பொதுமக்கள் வரிப்பணத்தை கொடுத்து வீணடிப்பது தவறு. .பாரத தேசிய விளையாட்டு ஹாக்கி ஐ அரசே கண்டுகொள்வது இல்லை. நடிகைகளோடு கூத்தடிக்கும் கிரிக்கெட் ஆசாமிகளுக்கு அரசு செலவு செய்வது மிகவும் தவறு.


RAAJ68
ஜூலை 07, 2024 09:20

மும்பை முழுவதும் சாலை ஓரங்களில் மக்கள் ரசிக்கின்றனர் அவர்களுக்கு தூங்குவதற்கு இடம் கிடையாது நல்ல சாப்பாடு கிடையாது அப்படி இருக்கையில் ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் கிரிக்கெட் வான்களுக்கு எதற்கு 11 கோடி ரூபாய் தர வேண்டும். இந்த சிண்டு மும்பையை வலம் வரும்போது கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு உள்ளாரா.


visu
ஜூலை 07, 2024 08:52

இது அரசியல் போட்டி யார் கொடுத்தது என்ற பெருமைக்காக கொடுக்கின்றனர் கொடுக்காவிட்டால் இதே எதிர்க்கட்சிகள் வெற்றி பெட்ர மாநில மாநில அரசு கௌரவிக்க வில்லை என்பார்கள் இத்தேர்க்கு பேசாமல் எதேர்க்கு மாநில அரசு/மத்திய அரசு பரிசுத்தொகை நட்ட ஈடு அளிக்க வேண்டும் என வரைமுறை படுத்தி சட்டம் இயற்றலாம் இல்ல யாரோ ஒருவர்தான் வழங்கலாம் என கட்டுப்பாடு விதிக்கலாம் . அதுவும் பிசிசிஐ வசதியுள்ள தனியார் அமைப்புதான்


Kalyana Raman
ஜூலை 07, 2024 08:17

அது எப்பிடி திமிங்கிலம், இங்கே கொழுப்பெடுத்து கள்ள சாராயம் குடிச்சு செத்தவன் குடும்பத்துக்கு 10 லட்சம் குடுத்தபோது பொத்திக்கிட்டிருந்தவங்க


skv srinivasankrishnaveni
ஜூலை 08, 2024 05:48

கொள்ளை அடிச்சு சேர்த்KOடிக்கல்லேந்த தாறானுக மக்கள்வரிப்பணம்தானே ஊதாரியா சிலவு செய்துட்டு மத்திய அரசு ஒண்ணுமே தரலேன்னு ஒப்பாரி VAPPAANUKA


பேசும் தமிழன்
ஜூலை 07, 2024 07:45

அவர்கள் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை தேடி தந்து இருக்கிறார்கள்.... அவர்களுக்கு பரிசு கொடுப்பது எப்படி குற்றமாகும்.... இங்கே எங்கள் தமிழ்நாட்டில் கள்ள சாராயம் குடித்து செத்தவர்களுக்கு கூட..... 10 லட்சம் பரிசு தொகை கொடுக்கிறார்கள்.


NALAM VIRUMBI
ஜூலை 07, 2024 07:40

11 கோடி என்பது அதிகம் தான். தவறு யார் செய்தாலும் அது தவறு தான். ஏழை எளிய மக்களுக்கு எத்தனையோ நலத் திட்டங்கள் உள்ளபோது இவ்வாறு விளையாட்டு வீரர்களுக்கு கண்மூடித்தனமாக வழங்குவது சரியல்ல.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி