உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்

ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்

துவாரகா:சுதந்திர தினத்தை ஒட்டி, டில்லி துவாரகா செக்டார் 7-ல் அமைந்திருக்கும் ஸ்ரீ ராம் மந்திரில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம் நடைபெற்றது.நேற்று காலை 8:30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஸ்ரீ ஹனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.அதன்பின், காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பாராயணம் செய்தனர்.இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை