உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் பலி; ராஜ்யபசபாவில் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் பலி; ராஜ்யபசபாவில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் பலியாகி இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீர்த்திவரன் சிங் ராஜ்யபசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் படி புலிகள் தொடர்பான தகவல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆணைய விவரப்படி; சமீபத்தில் புலிகள் இறப்பு அதிகரித்துள்ளது. 2019ல் 96 புலிகளும், 2020ல் 105 புலிகளும்,2021ல் 127 புலிகளும்,2022ல் 121 புலிகளும்,2023 ல் 178 புலிகளும் இறந்துள்ளன. இதில் 2012 முதல் அதிகம் புலிகள் பலியானது 2023ல் 178 புலிகள் அதிக பலியாகும்.புலிகளால் இதுவரை 348 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மஹராஷ்ட்டிராவில் மட்டும் 200 பேர் புலிக்கு பலியாகி உள்ளனர். 2022 கணக்கின்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Swaminathan L
ஜூலை 26, 2024 17:22

இவ்வளவு புலிகள் எப்படி இறந்தன என்கிற விபரம் அவசியமில்லாதது போலிருக்கிறது. எனிவே, கேள்விக்கேற்பத்தானே பதிலும் இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை