உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது

நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கண்ணூர்: ஓமன் நாட்டிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை விமான பணிப்பெண் தன் வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கேரளாவின் கண்ணுருக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த 28-ம் தேதி கொச்சி பிரிவு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையம் வந்திறங்கிய பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் சிக்கவில்லை .இந்நிலையில் விமானப்பணிப்பெண் ஒருவர் மேல் சந்தேகம் ஏற்படவே அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் மலக்குடலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 980 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.தங்கம் கடத்திய விமான பணிப்பெண் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த சுரபி காதுண் என்பதும் இதற்கு முன் இது போன்று பல முறை தங்கம் கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.அவரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மாஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

kalyan
ஜூன் 03, 2024 22:57

ஒரு முறை நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது , என் பாட்டி உண்டியலில் பணம் போட என்னிடம் பணம்கேட்டார் , ஜீன் பேண்டின் பின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க முயன்ற பொது " அங்கிருந்தெல்லாம் எடுக்கும் பணம் சாமிக்கு போட முடியாது.. வேண்டாம் " என்று மறுத்து விட்டார் . அவர் இப்போது உயிரோடு இருந்தால் கேரளாவில் தங்க நகையே வாங்கி இருக்க மாட்டார்


Chandhra Mouleeswaran MK
ஜூன் 01, 2024 11:40

உருப்படியா முதுகு வளச்சு வேர்வை சிந்தி வேலை செய்யரதுன்னா இவாளுக்கு ஆகாதே எங்கியாச்சும் இருந்து எதையாச்சும் எப்படியாச்சும் கடததி வரத்தான் பாக்காராங்கப்பா


jayvee
ஜூன் 01, 2024 07:58

விமான ஊழியர்கள் அதாவது கழிவறை சுத்தம் செய்பவர்கள் முதல் பையலட் உட்பட யாருக்கும் செக்யூரிட்டி சோதனையில் ஆரம்பித்து கஸ்டம்ஸ் சோதனைவரை எதுவுமே நடப்பதில்லை.. ? இது கஸ்டம்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புதலுடன் நடைபெறும் திருட்டா ? இவர்களுக்கு என்று தனி நுழைவாயில் வைத்து அணைத்து சோதனைகளும் செய்யவேண்டும். இவர்களும் பயணிகளை போல அல்லது குறைந்தது ஒரு மணிநேரம் முன்பே விமானநிலையத்தில் அணைத்து சோதனைகளுக்கு ஆஜராகவேண்டும்.. DGCA ஒரு வணிக நிறுவனமா?


Anantharaman Srinivasan
ஜூன் 01, 2024 00:19

தங்கம் கடத்துவதில் ஆண் முஸ்லீம்கள் மட்டுமல்ல பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது தெரிகிறது.


Jysenn
மே 31, 2024 23:55

No business establishment survives in Kerala because of the destructive policies of the commies. But Kerala not only has many thriving gold houses but a vast majority of gold houses in other states are owned by the Kerala people. Something drastically wrong somewhere as some invisible forces from Kerala operate unhindered. The central agencies must look into this gold business originating from Kerala.


ஆரூர் ரங்
மே 31, 2024 22:10

காத்தூன் ?.மார்க்க பெயராச்சே.


Azar Mufeen
ஜூன் 01, 2024 02:50

சுரபி என்பது எந்த மதத்து பெயர் அய்யா, பணம் கொடுத்தால் தப்பு செய்ய எல்லா மதத்திலும் ஆட்கள் கிடைப்பார்கள்


வல்லரசு
மே 31, 2024 22:02

பணத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.. கொலைகூட....


sankaranarayanan
மே 31, 2024 21:03

மேற்குவங்க மாநிலம் முதல்வர் மமதை மாமதாவைக்கேட்டு கைது செய்யங்கள் இல்லையேல் அவர் உடனே உச்சநீதி மன்ற சென்று ஜாமின் வாங்கிவிடுவார்


Ramesh Sargam
மே 31, 2024 20:01

இப்பொழுது புரிகிறது எப்படி அவ்வளவு தங்க நகை கடைகள் கேரளா மாநிலத்தில் என்று?


MARUTHU PANDIAR
மே 31, 2024 19:20

சீ குமட்டுதப்பா


Senthoora
மே 31, 2024 21:19

எல்லோரும் தங்கத்தை பீரோவில் பூட்டிவைத்து, தலை, கால், கைகளுக்கும் போடுவார்கள். ஆனால் தங்கம் எப்படி கடத்தப்படுகிறது, இப்போ எப்படி தங்கத்தை ......?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ