உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி

பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு களமிறங்கி உள்ளது. சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.விடுமுறை காலங்களில் பயணிகள் அதிகம் பேர் விமான பயணத்தை நாடுவதை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் நிறுவனங்கள், அந்த நேரத்தில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: பண்டிகை காலத்தில் விமான கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்படும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பயணிகள் எந்தவித அசவுகரியம் ஏற்படக்கூடாது என் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். பண்டிகை காலத்தில் அனைவரும் வீடுகளுக்கு திரும்ப நினைப்பார்கள். இதனால், கட்டணத்தை உயர்த்தக்கூடாது.விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நுகர்வோன்
செப் 09, 2024 21:27

பண்டிகைக் காலத்தில் வேலை செய்யும் பைலட்கள், பணியாளர்களுக்கு டபுள் சம்பளம் குடுக்கணும். மேலும் வ நாட்களில் விமானம் காலியாப் போனாலும் அரசுக்கு கவலையில்லை. காசிருக்கறவன் அதிக விலை குடுத்துப் போறான். இதே அரசு தத்கால்னு ரயில் டிக்கட் வித்து காசு பாக்கலியா? அதையெல்லாம் எவன் கேள்வி கேப்பான் கோவாலு? பேசாம விமான சேவையையும் இவனுங்களே எடுத்து நடத்தி மலிவு விலையில் எல்லிரையும் கூட்டிட்டுப் போகட்டும்.


saravanan
செப் 09, 2024 19:31

பண்டிகை காலம் என்று மட்டுமல்ல, இப்போதெல்லாம் எல்லா நாட்களிலும் விமானங்களில் பகல் கொள்ளை தான் நடக்கிறது விமான சேவைகளில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் மட்டும் கோலோச்சுவதாலோ என்னவோ கட்டணங்கள் குறைக்கப்படாமல் விண்ணில் பறக்கின்றன. கட்டண நிர்ணயங்களில் Dynamic Pricing Policy ஏற்புடையது என்றாலும் விலை குறைப்பு என்பதையே தற்போது காண முடிவதில்லை. Connecting flightல் மட்டுமே கட்டண குறைவு அறிவிக்கிறார்கள் ஆனால் பயண நேரம் அதிகம். மத்திய அரசு நிச்சயம் இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும்


தத்வமசி
செப் 09, 2024 15:17

இது காலம் காலமாக உலகம் முழுவதும் நடைபெறுகிறது. முன்பு கோடைகாலத்தில் மட்டும் அதிகரித்து வந்தார்கள். பிறகு முக்கியமான பண்டிகை வருகிறதோ அப்போதெல்லாம் உயர்த்த ஆரம்பித்தனர். இப்போது எப்போதெல்லாம் கூட்டம் அதிகமாகிறது அப்போது உயர்த்துகிறார்கள். இது பகல்கொள்ளை என்றே கூறலாம். கடந்த வாரம் இந்தியாவிற்குள் பயணம் செய்தென். அப்போது சீக்கிரம் உங்களின் சீட்டினை முடிவு செய்து கொள்ளுங்கள், இல்லை வேறு ஒருவருக்கு கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்று செய்தி வருகிறது. அப்படி ஒரு சீட்டை நான் முடிவு செய்ய நானூறு ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி போக்குவரத்து சிலவு போக, சீட்டுக்கும் பணம் தர வேண்டும். இதில் இவர்கள் டீ, காபி, சாப்பாடு, செய்தித் தாள் என்று எதையும் ஒடுக்கப் போவதில்லை. தண்ணீர் அல்லது சூடு தண்ணீர் கேட்டால் கொடுக்கிறார்கள், பரவாயில்லை, அதற்கும் நூறு ரூபாய் கொடு என்று சொல்லாமல் இருக்கிறார்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை