மேலும் செய்திகள்
பெரும் தவறு!
2 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
2 hour(s) ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
2 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
5 hour(s) ago
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பா.ஜ., தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிப்.,28ம் தேதி என்னை நேரில் சந்தித்து, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். அதில், ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (மார்ச் 5) மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பா.ஜ., தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்தனர். கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கி உள்ளதால், நாடு வளம் பெற, ஒற்றுமை உணர்வு ஓங்கி, மீண்டும் நல்லாட்சி அமைய மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்ய பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படுவது என முடிவு எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
5 hour(s) ago