உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் ரோடு ஷோவில் தொண்டர்கள் வரவேற்பு

நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் ரோடு ஷோவில் தொண்டர்கள் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.,19) வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். முன்னதாக இன்று தனது காந்திநகர் தொகுதியில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்ற அவருக்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் அடுத்தகட்ட தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபடுகிறது. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 7ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடுகிறார்.கடந்த தேர்தலில் சுமார் 5 லட்சம் ஓட்டுகளை பெற்று வெற்றிப்பெற்றிருந்தார். அதற்கு முன்னதாக பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டு வென்றிருந்தார். காந்திநகர் தொகுதியில் நாளை அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து இன்று காந்திநகரில் 'ரோடு ஷோ' நடத்திய அமித்ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை