உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் கைது: விரைவில் நாடு கடத்த முடிவு

டில்லியில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் கைது: விரைவில் நாடு கடத்த முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.டில்லியில் சட்ட விரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கைகளில் போலீசார் மும்முரமாக உள்ளனர். இதற்காக ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.கடந்த மாதம் 16ம் தேதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தில்வார் கான்(48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தான் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் எனக்கூறியுள்ளார். ஆனால், ஆவணங்களை பரிசோதனை செய்ததில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து டில்லி என்.சி.ஆர் பிராந்தியத்தில் உள்ள லக்ஷ்மி நகர், லஜ்பத் நகர், கிருஷ்ணா நகர், சீமாபுரி, ஷலிமார் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்தவர்களின் ஆவணங்களை சோதனை செய்தனர்.அதில், பியூட்டி பேகம்(39), ரபிகுல்(43) தவுஹித்(20) , முகமது அசார்(28), ஜாகிர் மாலிக்(40) மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி டில்லியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் 7 பேரையும் விரைவில் நாடு கடத்துவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Iyer
ஏப் 12, 2025 05:10

கடலில் கரைத்த பெருங்காயம் போல் - 2 அல்லது 2 பேரை கைது செய்து நாடு கடத்துவதால் மட்டும் இந்த பிரச்னை தீராது. தேதி கெடு கொடுத்து அதற்குள் சரணடையாத பங்களாதேசிகள் ரொஹிங்கியாக்களை DETENTION CENTER ல் கைது செய்வோம் என்று அறிவித்து - எல்லா EMPLOYERS க்கும் தன்னிடம் வேலை செய்பவர்களின் குடிமகன் பத்திரம் உறுதிசெய்ய கட்டாயம்மாக்கணும்


Srinivasan Krishnamoorthy
ஏப் 12, 2025 17:04

first of all we cannot act like Trump when courts and few state governments help illegals, atleast be happy about these actions. if you choose pappu and stalin as your masters to rule this country, we can only be doomed with illegal immigrants


RAJ
ஏப் 12, 2025 01:17

அட பரதேசிங்கள, அவனுங்க எப்புடிடா உள்ள வந்தானுங்க.. உள்ள விட்டவனா என்ன பண்ணலாம்?


vadivelu
ஏப் 11, 2025 23:55

இங்கே அவர்களை வங்க தேசத்தினர் என்று சொல்வதில்லை , வடக்கர்கள், வட மாநிலத்தினர் என்றுதான் சொல்ல படுகின்றனர்.


MARUTHU PANDIAR
ஏப் 11, 2025 22:01

மமதாவின் சொத்து மதிப்பு கொறஞ்சிருக்கும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை